நயினாதீவு அருள்மிகு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் தேவஸ்தான வருடாந்த திருக்குளிர்த்தி பொங்கல் வேள்வி விழா விஞ்ஞாபனம் - 2017
02.06.2017 கும்பஸ்தான நிகழ்வுடன் ஆரம்பம்.
09.06.2017 யாழ்நகரில் இருந்து விநாயகப்பானை எடுத்துவரல்.
10.06.2017 வேள்வி விழா.
நயினாதீவு ஸ்ரீ பிடாரி அம்பாள் அன்னதான சபையினரால் 02.06.2017 தொடக்கம் 10.06.2017 வரையும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் நயினாதீவு ஸ்ரீ பிடாரி அம்பாள் கூட்டுப்பிரார்த்தனை சபையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்வும் இடம்பெறும்.
முக்கிய குறிப்பு : எம் பெருமாட்டியின் வேள்வி விழா சிறப்பாக நடைபெற நயினை வாழ் சைவ அடியார்கள் வதியும் இல்லந்தோறும் அன்னையின் அடியார்கள் காணிக்கைப் பொருட்களை ஏற்றுக்கொள்வதற்காக பவனிவருவார்கள். எனவே தாங்கள் தங்களால் இயன்ற காணிக்கை பொருட்கள், பழவகைகள், பிஷேகபொருட்கள், தேங்காய், இளநீர் என்பனவற்றை வழங்கலாம் என்பதனை அறியத்தருகின்றோம்.
"தாயே ஆகி வளர்த்தனை போற்றி
போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே போற்றி"
இங்கனம்
ஆலய பரிபாலன சபையினர்
நன்றி.
நயினை மண்ணின் சமயத்துறையின் வலம்..
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,