யாழ்ப்பாணம் நயினாதீவு கடற்பரப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளது.
நயினாதீவு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கஞ்சா பொதிகள் மீட்க்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நயினாதீவு கடற்கரைப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 10 கிலோ கிராம் கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளது.
நயினாதீவுப்பகுதி சுற்றுலா தலமாக காணப்படுகின்றது. இங்கு அதிகளவான தென்னிலங்க யர்கள் (சிங்கள சுற்றுலா பயணிகள்) வருகை தருகின்றனர்.
இது தொடர்பாக எவரும் இதுவரை கைதுசெய்யப்படாத நிலையில் ஊர்காவல் துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நயினாதீவில் காணப்படும் வணக்கஸ்தலங்களின் புனிதத்தை பாதிப்புக்குள்ளாகும் நயினாதீவு மக்களின் கலாச்சாரத்தை சீரழிக்கும் செயற்படாகவும் காணப்படுகின்றது.