WHAT’S HOT NOW

ads header

நயினாதீவு செய்திகள்

Theme images by kelvinjay. Powered by Blogger.

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

மரண அறிவித்தல்

எம்மைப்பற்றி

அன்பார்ந்த நயினை வாழ் உறவுகளே... அன்பார்ந்த நயினை புலம் பெயர் உறவுகளே... நயினைப் பற்றாளர்களே.... நயினை மண்ணில் இடம் பெறுகின்ற அனைத்து சமபவங்கள்,நிகழ்வுகள்,ஆலய திருவிழாக்கள் என்பவற்றின் கணணிஒளியினை எமது முகப்புத்தகத்தில் பார்வையிட முடியும்.. நம்மூரின் நிகழ்வுகளை நாளுக்கு நாள் பார்வையிட நயினை நட்சத்திரச் செய்தியுடன் இணையுங்கள். நயினை மண்ணில் இடம் பெறும் அனைத்து சிறப்பு நிகழ்வு களையும் எம் முகப்புத்தகத்தின் ஊடாக உடனுக்குடன் பார்வையிட முடியும். நன்றி. நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல், நயினை நட்சத்திரச் செய்தி nainativu starnews தொடர்புக்கு - nainativustarnews@gmail.com

» » » » பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரியம்மனின் வரலாற்றுப்புகழ்பாடும் “அற்புதகீதங்கள்” இறுவட்டு வெளியீட்டு விழா..!!

பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரியம்மனின் வரலாற்றுப்புகழ்பாடும் “அற்புதகீதங்கள்” என்ற இறுவட்டு 02/08/2015 (ஞாயிற்றுக்கிழமை) வருடாந்த மகோற்சவ முதலாம் நாள் கொடியேற்றம் அன்று பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வெளியீடு செய்யப்படவுள்ளது அனைத்து அன்னையின் அடியார்களையும் வருக வருக என்று அன்போடு அழைக்கின்றனர்.


பாடலுக்கான இசையினை ஈழத்து இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் அவர்கள் மிகவும் அற்புதமாக வழங்கியிருக்கின்றார். ஜெயநாதன் மற்றும் நயினை மண்ணின் மைந்தன் நயினை அன்னைமகன். ஆகியோர்களின்  கவிவரிகளுக்கு இனிய குரல் கொடுத்திருக்கின்றார்கள் S.G.சாந்தன், K.ஜெயரூபன், S.கோகுலன், S.சுலக்சன், பிரதா.K, S.G.கோபு,நெடுங்கேணி ராஜேந்திரா அவர்கள்.


01) 
பாடல் :- அதிகாலையிலே...
பாடியவர்:- க. ஜெயரூபன்.
பாடல்வரிகள்:- நயினை அன்னைமகன்.
02)
பாடல் :- பன்னைமரச் சோலையிலே...
பாடியவர்:- ஸ்ரீ. சுலக்ஷன்.
பாடல்வரிகள்:- நயினை அன்னைமகன்.
03)
பாடல் :- சம்புவில்துறை கடலலை...
பாடியவர்:- சா.கோகுலன்
பாடல்வரிகள்:- நயினை அன்னைமகன்.
04)
பாடல் :- கனவினில் தோன்றும்...
பாடியவர்:- க. ஜெயந்தன்.
பாடல்வரிகள்:- நயினை அன்னைமகன்.
05)
பாடல் :- பசுமைசூழ் பணிப்புலம்...
பாடியவர்:- எஸ்.ஜீ. சாந்தன்.
பாடல்வரிகள்:- பே. ஜெயநாதன் ஐயா.
06)
பாடல் :- வெள்ளிச்சலங்கயொலி...
பாடியவர்கள்:- ஜெயப்பிரதா.க, க.ஜெயந்தன்.
பாடல்வரிகள்:- நயினை அன்னைமகன்.
07)
பாடல் :- அம்மா அம்மா...
பாடியவர்:- க. ஜெயரூபன்.
பாடல்வரிகள்:- பே. ஜெயநாதன் ஐயா.
08)
பாடல் :- பணிப்புல நாயகியே...
பாடியவர்:-க.ஜெயந்தன்.
பாடல்வரிகள்:- நயினை அன்னைமகன்.
09)
பாடல் :- வாரி வாரி...
பாடியவர்:- எஸ்.ஜீ. சாந்தன்.
பாடல்வரிகள்:- நயினை அன்னைமகன்.
10)
பாடல் :- முத்தான வரமருள...
பாடியவர்:- நெடுங்கேணி இராஜேந்திரா.
பாடல்வரிகள்:- நயினை அன்னைமகன்.
11)
பாடல் :- உடுக்கையொலி கேட்குதம்மா...
பாடியவர்:- எஸ்.ஜீ. கோபு.
பாடல்வரிகள்:- நயினை அன்னைமகன்.
12)
பாடல் :- வேதம் ஓதும் நாவில்...
பாடியவர்:- ஜெயப்பிரதா.க
பாடல்வரிகள்:- நயினை அன்னைமகன்.



மேலும் இப்பாடல்கள் மிகவும் சிறந்த முறையில் தென்னிந்திய கலைஞர்களுக்கு நிகராக அமைய கடும் முயற்சியோடும் உழைப்போடும் ஒத்துழைப்பும் நல்கிய அனைத்து ஈழக்கலைஞர்களுக்கும் மிக்க நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தகவல்
எம் மண்ணின் மைந்தன்
நயினை அன்னைமகன்
T S M  நவரூபன்.

அத்துடன் அனைத்து அம்பிகை அடியார்களையும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றார்கள் விழா ஏற்பாட்டாளர்கள். இவ் வெளியீட்டு நிகழ்வுகளை “ Naintivu star " இணையத்தினூடாக இணைந்திருந்து பார்வையிடுங்கள்.

நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,




«
Next
Newer Post
»
Previous
Older Post