நயினாதீவு இரட்டங்காலி முருகன் ஆலயத்தில் 28.06.2014 அன்று கொடித்தம் நாட்டும் வைபவம் இடம் பெற்றது.
நயினாதீவு இரட்டங்காலி முருகன் ஆலயத்தில் உயர் திருவிழா நடாத்துவதற்காக நீண்டகாலமாக ஆலய பரிபாலன சபையினரும் அப்பகுதி மக்களும் பெரும் முயற்சி செய்து வந்தனர். அந்த வகையில் முருகப்பெருமானின் அருட்பார்வையால் மகோற்சவம் நடாத்துவதற்கு திருவருள் கைகூடியுள்ளது.
அதன் பிரகாரம் 28.06.2014 அன்று கொடித்தம் நாட்டும் வைபவம் இடம் பெற்றது. வருகின்ற மாதம் ஆடிவேல் தினத்தன்று தீத்தோற்சவமாக கொண்டு மகோற்சவம் நடாத்த திருவருள் கூடியுள்ளது.
உபயம் : திரு குலசேகரபிள்ளை குடும்பம் (நயினை 02)
நன்றி.
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,
படங்கள் Nainai M Kumaran அவர்கள்